தருமபுரி, அக்.6- தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் உழவர் சந்தை அமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டத்தில் தக்காளி, பீர்க்கங்காய், வாழை, பாகற்காய், கத்தரி, முள்ளங்கி, வெண்டை மற்றும் அனைத்து வகையான காய்கறிகளும் அனைத்து வகையான காய்கள், பூ வகைகளும் பயிரிடப்படு கின்றன. இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் பொம்மிடி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகி றது. இங்கிருந்து காய்கள் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் அனுப் பப்படுகிறது. இதில் விவசாயிகள் விளைவிக்கும் காய்களுக்கு இடைத் தரகர்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் இடைத்தரகர்கள் அதிக அளவில் சம்பாதிக்கின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உழவர் சந்தை இல்லை. எனவே தமிழக அரசு பொம்மிடியை மையப்படுத்தி உழவர் சந்தை அமைப் பதின் மூலம் மக்களுக்கும், விவசாயி களுக்கும் பயனுள்ளதாக அமையும், குறிப் பாக விவசாயிகளின் விளைபொருட் களுக்கு கட்டுப்படியான விலை கிடைக் கும். நுகர்வோரான பொதுமக்களுக்கு காய்கள் உரிய விலையில் கிடைக்கும். மேலும் உள்ள பொம்மிடி காய் கடை சந்தையில் வரி வசூல் செய்ய பேரூராட்சி மூலம் ஒப்பந்தம் எடுத்துள்ள குத்தகைதாரர் அதிகளவில் வரி வசூல் செய்வதாக விவசாயிகள் புகார் கூறு கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை வசூல்செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.