tamilnadu

img

தருமபுரியில் சிறுதானிய கருத்தரங்கு, விதைத் திருவிழா

தருமபுரி, மார்ச் 9- தருமபுரியில் வேளாண்மைத் துறை மற்றும் தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியா ளர் நிறுவனம் இணைந்து நடத் திய சிறுதானிய கருத்தரங்கு மற்றும் விதைத் திருவிழாவை  உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி.அன்பழகன்  துவக்கி வைத் தார். தருமபுரி டிஎன்சி மஹாலில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன்  பேசி யதாவது, தருமபுரி மாவட்டம் அனைத்து வகையான வேளாண்மை மற்றும் தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி செய்வதற் கான தட்பவெப்ப நிலை மற்றும் மண்வளம் கொண்ட மாவட்ட மாக உள்ளது. தருமபுரி மாவட் டத்தின் மொத்த பரப்பளவு 3,42,998 ஹெக்டரில், 2,04,537 ஹெக்டர் பரப்பளவில் அனைத்து பயிர்களும், காரீப் மற்றும் ராபி பருவங்களில் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது என்பது குறிப்பி டத்தக்க ஒன்றாகும். இம்மாவட் டத்தில் 76,500 ஹெக்டர் பரப்பு இறவையாகவும், 1,28,037 ஹெக் டர் பரப்பு மானாவாரியாகவும் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் 2,10,528 விவசாய குடும்பங்கள் உள்ளன. அதில் 1,64,210 நபர்கள் குறு விவ சாயிகள். 29,473 நபர்கள் சிறு விவசாயிகள் (14%) மீதமுள்ள 16, 243 விவசாயிகள் (8 %) நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் ஆகும். தமிழ்நாட்டைப் பொருத்த மட்டில், இந்த ஆண்டு சிறுதானி யங்கள் 10 லட்சம் ஹெக்டர் பரப்ப ளவில் சாகுபடி செய்யப்பட்டு 40 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானி னியம் உற்பத்தி செய்யப்பட்டுள் ளது என்பது பாராட்டத்தக்க ஒன் றாகும். இம்மாவட்டத்தைப் பொருத்தவரையில், சிறுதானிய பயிர்கள் சோளம் 41,330 ஹெக் டேர், ராகி 15,650 ஹெக்டர், மக் காச்சோளம் 2,540 ஹெக்டர், சாமை 3980 ஹெக்டேர் மற்றும் கம்பு 390 ஹெக்டர் பரப்பளவி லும் மொத்தம் 63,890 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பப் டுள்ளன. சிறுதானியங்கள் உற் பத்தி 1 லட்சத்து 52 ஆயிரம் மெட் ரிக்டன் என கணிக்கப்பட்டுள்ளது. சிறுதானியத்தில் அதிக அள வில் உணவு சத்துக்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன் றாகும். நமது பாரம்பரிய உணவு சிறுதானியம் மட்டுமே, பண்டைய காலத்தில் அரிசி உணவு, பண்டி கைக்கு மட்டும்தான்.  பெரும்பா லான மக்களின் அடிப்படை உணவு சிறுதானியங்கள் தான். இந்த மாசற்ற சிறு தானியங்கள் சாப்பிட்டுதான் நமது முன்னோர் கள் நோய் நொடியில்லாமல் நெடுங்காலம் வாழ்ந்தார்கள். சமீப காலத்தில் நமது மக்களின் உணவு பழக்கம் மாறிக்கொண்டு வருகி றது. அரிசி சாப்பாட்டிலிருந்து அனைவரும் சிறுதானியத்திற்கு மாறிக் கொண்டு வருகிறோம். சிறு தானியங்கள் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்ற அனைத்து தாது உப்புகள், வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. இன் றைய நவீன மருத்துவ உலகம் சிறு தானியம் நீரிழிவு நோய், உடல் எடை குறைப்பு, புற்றுநோய், மூளை வளர்ச்சி, வயதாவதை தடுக்க, இரத்த அழுத்தத்தை குறைக்க மிக சிறந்த உணவு என அறிவியல் ரீதியாக சொல்லப்ப டுகிறது என பேசினார். இவ்விழாவில், பாப்பிரெட்டிப் பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், தரு மபுரி மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் எம்.பொன்னு வேல், சிவப்பிரகாசம், தருமபுரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற் பனை பண்டக சாலை  தலைவர் பெ.ரவி, வேளாண்மை துறை இணை இயக்குநர் ஷிவ் சங்கர் சிங், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனவாசன், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் தமிழ்செல்வன், தரும புரி ஒன்றியக்குழுத் தலைவர்  நீலா புரம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.