tamilnadu

img

சுகாதார வளாகத்தை சீரமைக்கக் கோரிக்கை

தருமபுரி, ஜன.5- பாப்பாரப்பட்டி அருகே சுகாதார வளா கத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பென்னாகரம் தாலுகா, பாப்பாரப் பட்டி அருகே வேப்பிலைஅள்ளி ஊராட்சிக் குட்பட்ட சஜ்ஜலஅள்ளியில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக, கடந்த 2011ஆம் ஆண்டு ஊரக கட்டிடம் பரா மரித்தல் மற்றும் புனரமைப்பு திட்டத்தின்  கீழ் ஒருங்கிணைந்த, மகளிர் சுகாதார  வளாகம் ரூ.1.71 லட்சத்தில் புதுப்பிக்கப் பட்டது.  இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப் பட்ட பின்னர், ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பு இல்லாததால் சுகாதார வளாகம்  மூடப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பெரிதும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். மேலும், சுகாதார வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு  கதவுகள், சுவர்கள் சேதமடைந்த நிலையில்  உள்ளது. எனவே, சுகாதார வளாகத்தில் போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். 

;