தருமபுரி, அக்.16- அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி புதிய காலனியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், எல்லப்புடையாம்பட்டி புதிய காலனி செல்லும் சாலையில் 3 மின் கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இந்த மின் கம்பங்கள் சாலையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாதவாறு இடையூறாக உள்ளது. தற்போது, இங்குள்ள மண் சாலையை தார்ச் சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெறு கிறது. மின் கம்பங்கள் இடையூறாக இருப்பதால், சாலையோரத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க முடியாத நிலையுள்ளது. எனவே, எல்லப்புடையாம் பட்டி புதிய காலனிக்கு செல்லும் வழியில் உள்ள மின் கம்பங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இடமாற்றம் செய்து வேறு இடத்தில் அமைக்க வேண்டும். அதேபோல், தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகளை உயர்த்து வதற்காக கூடுதலாக இரண்டு உயரமான புதிய மின் கம்பங்களை நிறுவ வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.