தருமபுரி, மார்ச் 19- அரூர் அரசு மருத்துவ மனைக்கு கூடுதல் மருத்து வர்களை நியமிக்க வேண் டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனை யில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய், சேய் நல மையம் உள்ளது. இம் மருத்துவமனையில் நாள் தோறும் 1,500 புறநோயாளி களும், 300 உள் நோயாளிக ளும் சிகிச்சைப் பெற்றுவரு கின்றனர். அரூர் வட்டாரப் பகுதியை சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்களுக்கு இந்த மருத்துவமனை பயன்பட்டு வருகிறது. இந்தநிலை யில், அரூர் அரசு மருத்துவ மனையில் நரம்பியல், சிறு நீரகம், இருதயம், நுரையீ ரல்,வயிறு மற்றும் குடல், கண் உள்ளிட்ட பிரிவுகளுக் கான சிறப்பு மருத்துவர்கள் இல்லை. இதனால், நோயா ளிகள் மேல்சிகிச்சைக்காக சேலம், தருமபுரி அரசு மருத் துவமனைகளுக்கு சிகிச் சைக்காக செல்லும் நிலை யுள்ளது. எனவே, அரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.