tamilnadu

வாணியாறு கரைகளில் தார்ச்சாலை அமைத்திடுக பாசன விவசாயிகள் கோரிக்கை

 தருமபுரி, அக்.6- வாணியாறு கரைகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டு மென பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத் திற்குட்பட்டது வாணியாறு அணை. இந்த அணையில்  இருந்து தண்ணீர் கொண்டு செல்ல பாசன கால்வாய்கள் அமைந்துள்ளது. இந்த பாசன கால்வாய்கள் மூலம்  மோளையானூர், மெனசி, பூதநத்தம், தென்கரைக் கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, வெங்கடச் சமுத்திரம்,  அதிகாரப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கால்வாய் மூலம் சாகுபடி செய்யும் விளைபொருட்களை வாகனங் களின் மூலம் எளிமையாக கொண்டு சென்று சந்தை ப்படுத்து வதற்கு ஏதுவாக கரைகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். மேலும் இந்த கால்வாய்களில் இருந்து ஆலாபுரம், வெங்கடசமுத்திரம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல வழித்தடத்தை நீட்டிப்பு செய்யவேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.