தருமபுரி, ஆக. 12- கருங்கல்பாடி கிராமத்தில் சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் தனியார் கோழிப் பண்ணையை அப்பகுதி மக்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தால் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கருங்கல்பாடி கிராமத்தில் எஸ்.கே.எம் என்ற பெயரில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இதில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழக்கின்றன.
இந்நிலையில், இறந்து போன கோழிகளை சுகாதாரமற்ற முறை யில் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் கரும்புகையுடன் துர் நாற்றம் வீசி வருகிறது. மேலும், இப்பண் ணையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் சுகாதார சீர்கேட்டால் பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தற்போது வரை எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சமீபகாலமாக கோழிக் கழிவுகளிலிருந்து வரும் ஈக்களின் தொல்லை அதிகரித்து வரும் சூழலில், அப் பகுதி மக்கள் கோழிப்பண்ணை நிர்வாகத் திடம் முறையிட சென்றுள்ளனர். அப் போது, பண்ணைக்கு உள்ளே சென்றவர் களை அத்தனியார் நிர்வாகம் பூட்டு போட்டு அடைத்துள்ளது.
இத்தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் உள்ளே அடைக்கப்பட்டவர் களை மீட்டு, பண்ணையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆய்வாளர் ஆனந்தன், ஊராட்சிமன்றத் தலைவர் ராணிமுத்து ஆகி யோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனை யடுத்து போராட்டத்தை கிராம மக்கள் கை விட்டனர்.