தருமபுரி, மார்ச் 12- அரூர், தீர்த்தமலைப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் ஐந்து 108 ஆம்புலன்ஸ்களும், பச்சிளம் குழந்தைகளுக்கான ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சேவையாற்றி வருகின்றன. அரூர் அரசு மருத்துவமனையில் நாளொன் றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், சுமார் 50க்கும் மேற் பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறு கின்றனர். அரூர் பெருநகரமாக உள்ள தால், அரூரில் விபத்து மற்றும் அவசர நோயாளிகளை காப்பாற்றுவதற்கு 108 ஆம்புலன்ஸ் வர வேண்டுமென்றால், சின்னான் குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்துதான் வரவேண்டும். மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படுவதால் உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், அரூரில் ஒரு 108 ஆம்புலன்ஸ் சேவையாற்றி வருகின்றது அந்த 108 ஆம்புலன்ஸ் அரூர் அரசு மருத்துவ மனையில் இருந்து, உயர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் அரூர் அரசு மருத்துவ மனையில் இருந்து சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, உயர் சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. எனவே அரூர் நகரத்திற்கு நிரந்தரமாக கூடுதலாக, ஒரு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் தீர்த்தமலை யில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாளொன்றுக்கு சுமார் 300 புறநோயாளிகளும், சுமார் 25 முதல் 50 உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தீர்த்தமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மாதத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வரு கின்றன. அந்த பகுதிகளுக்கு 108 ஆம்பு லன்ஸ் வரவேண்டுமென்றால், சின்ன குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுமார் 22 கி.மீ., செல்ல வேண்டும். அல்லது கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, சுமார் 20 கி.மீ., செல்ல வேண்டும். தீர்த்தமலையில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சையில் சிக்கிய வர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிய வில்லை. எனவே மாவட்டநிர்வாகம் அரூர், தீர்த்தமலை பகுதிக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.