தருமபுரி, டிச.7- தருமபுரி நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்த சோதனையில் 23 கிலோ பறிமுதல் செய்யப் பட்டு ரூ.27 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி நகரில் உள்ள அப்துல்முஜிப் தெரு, சித்த வீரப்பசெட்டி தெரு உள் ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் தடை செய்யப் பட்ட நெகிழிப் பொருள் கள் விற்பனை செய்யப் படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து நகராட்சி ஆணையா் எஸ்.சித்ரா மற்றும் சுகாதார அலுவலா்கள் 21 கடை களில் சோதனையில் ஈடுபட்டனா். இதில், 8 கடைகளில் தடை செய்யப் பட்ட நெகிழிப் பொருள்கள் விற் பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் 23 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், இப்பொருள் கள் விற்பனையில் ஈடு பட்ட கடைகளின் உரிமை யாளா்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது. இதேபோல், மாரண்டஅள்ளி தோ்வு நிலை பேரூராட்சி பகுதி களில் செயல் அலுவலா் ராஜா ஆறுமுகம் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்ட னர். இதில் மாரண்டஅள்ளி கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டது.