tamilnadu

img

மின்வாரிய கேங்மேன் எழுத்துத் தேர்விற்கு பயிற்சி

தருமபுரி, மார்ச் 1-  சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பு சார்பில் கேங்மேன்  பணிக்கான எழுத்துத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு ஞாயிறன்று அளிக் கப்பட்டது.  சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தோழர்  எஸ்.காளிமுத்து கல்வி மையத்தின்  சார்பில் கேங்மேன் எழுத்துத் தேர் விற்கான பயிற்சி தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்று வரு கிறது. துவக்க நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் டி.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில், பேரிடர் கால விழிப்புணர்வு மற்றும் முத லுதவி குறித்து ஹோலிகிராஸ் பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூசன் நிர் வாக இயக்குநர் சி.ரவிக்குமார் பயிற்சியளித்தார்.  மேலும், மின்உற்பத்தி, மின் தொடரமைப்பு, மின்விநியோகம், மின்சாரம் செலுத்தகை, மின்சார  கட்டமைப்பு குறித்து மின்வாரிய  கடத்தூர் கோட்ட செயற்பொறி யாளர் ஆர்.ரவி பயிற்சியளித்தார். முன்னதாக, மாநில துணைத் தலைவர் பி.ஜீவா, மாவட்ட பொரு ளாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட இணை செயலாளர்கள் சக்திவேல், எம்.காளியப்பன், மாவட்ட உதவித்  தலைவர்கள் ஜி.பி.விஜியன், குமர வேல் ஆகியோர் பேசினர். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்சோ. அருச்சுணன் வாழ்த்தி பேசினார். இந்த பயிற்சியில் வகுப்பில்  ஒப்பந்த ஊழியர்கள் நேரடி தேர்வு  எழுதுவோர் என நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.