தருமபுரி, ஆக.7- பார்ம்ரோஸ் எண்ணெய்க்கு அரசே விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் நிலையம் அமைத்து பெற்றிட வேண்டுமென தருமபுரி பார்ம்ரோஸ் விவசாயிகள் கோரிக் கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் விவ சாயமே பிரதான தொழிலாகும். இம் மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பருவ மழை குறைந்த அளவே பெய்வதால் வறட்சி நிலவுகிறது. மாவட்டத்தில் நீர்நிலை உள்ள பகுதியில் விவசாயிகள் பயிர் சாகு படி செய்து வருகின்றனர். ஆனால் மாவட்டத்தின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத்தான் உள்ள நிலையில் மேட்டு நிலங்களில் சோளம், சாமை, தினை பயிரிடப் பட்டு வருகிறது. அதேநேரம், அதிக முதலீடு செய் யாமல் பராமரிப்பின்றி மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுவது பார்ம்ரோஸ் பயிர் சாகுபடியாகும். தற்போது கடும் வறட்சி நிலவி வரும் சூழலில் பார்ம்ரோஸ் சாகுபடி செய் வதை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் அன்ன சாகரம், நூலஅள்ளி, லளிகம், மிட்டா ரெட்டிஅள்ளி, கோட்டப்பட்டி, நரிப் பள்ளி, பொம்மிடி, கடத்தூர், பாப்பி ரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பார்ம்ரோஸ் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பார்ம்ரோஸ் பயிர் ஒரு வகையான வாசனை திரவிய பயிராகும்வாசனை திரவியம் தயாரிப்பதற்கான மூலப் பொருள் பார்ம்ரோஸ் பயிரி லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பார்ம்ரோஸ் பயிரில் கிடைக்கும் திரவியம் குளியல்சோப்பு, சென்ட், ஊதுபத்தி உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப் பொருளாக விளங்குகிறது. இந்த பயிரிலிருந்து திரவியத்தை பிரித்தெடுத்த பின்பு பார்ம்ரோஸ் புல் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. இந்த பார்ம் ரோஸ் வாசனை திரவிய உற் பத்தி மூலப்பொருட்களுக்கு பயன் படுவதால் வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களாக பார்ம்ரோஸ் எண்ணெய்யின் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதில் பாதிப்படைந்த விவசாயிகள் அண்டை மாநிலங்களான கர் நாடகம், கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஊர் களுக்கு தினக்கூலிகளாக சென்று விடுகின்றனர். இதுகுறித்து பார்ம்ரோஸ் தயா ரிக்கும் விவசாயியும், உற்பத்தியாள ரான கோட்டப்பட்டி குமார் என் பவர் கூறுகையில், தருமபுரி மாவட் டத்தில் பார்ம்ரோஸ் தயாரிக்கும் சிறு ஆலைகள் சுமார் 70க்கும் மேல் உள்ளது. பார்ம்ரோஸ் புற்களில் இருந்து எடுக்கும் திரவியத்தை சென்னை, கோவை, கேரளா, கர் நாடக உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் இடைத் தரகர்கள் மூலமாக வாங்கி செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பார்ம் ரோஸ் எண்ணெய் 1 கிலோ ரூ.3 ஆயிரத்து 200 ரூபாய் வரை வாங்கி சென்றனர். தற்போது ஒரு கிலோ எண்ணையின் விலை ரூ.ஆயிரத்து 300 முதல் ரூ.1,800 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இந்த பார்ம்ரோஸ் எண்ணெய்யை இடைத்தரகர்கள் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது விவ சாயிகள் தான் என கவலையுடன் தெரிவித்தார். இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் தருமபுரி மாவட்டத்தில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென பார்ம்ரோஸ் விவ சாயிகளின் கோரிக்கை விடுக் கின்றனர்.