tamilnadu

img

7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்கிடுக துப்புரவுப் பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு

தருமபுரி, அக்.19- 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத் தில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணை எண் 3030-ன்படி ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதேபோல்,தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, அரூர், மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் வேலை செய்யும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக் கும் கடந்த ஓரிரு மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. எனவே, 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.