தருமபுரி, அக். 2- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்த னர். கடந்த 2013 ஆம் ஆண்டில் நடை பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 80 ஆயி ரம் பேர் என கூறப்படுகிறது. தேர்ச்சி யடைந்த இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அரசு பணி வழங்க வில்லை. பணி ஆணை வழங்காத மனஉளைச்சலால் 10க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற் போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு தான் ஆசிரியர் தகுதித்தேர்வு முறையை கொண்டு வந்தது.
எனவே, தகுதித்தேர்வில் தேச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வெள்ளியன்று தரும புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தருமபுரி, கிருஷ் ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இதையடுத்து அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டதாக தருமபுரி நகர காவல் துறையினர் போராட்டக்காரர் களை கைது செய்தனர். இப்போ ராட்டத்தில் ஆட்சியர் அலுவல கத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.