தருமபுரி, பிப். 10- தருமபுரி மாவட்டத்தில் விலை ஆதார திட்டத்தின் கீழ் துவரை கொள்முதல் துவங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் நடப்பு 2019-20 ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் பயறு வகை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆத ரவு விலையில் துவரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது தருமபுரி மாவட்டத்தில், 10999 ஹெக்டர் பரப்பளவில் துவரை சாகு படி செய்யப்பட்டு துவரை அறுவடை பணி துவங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், தருமபுரி விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக 500 டன், அரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 200 டன் மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 400 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது. துவரைக்கு நிர்ணயிக் கப்பட்ட தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவிகிதத்திற்குள் இருக்குமாறு நன்கு காய வைத்து விவசாயிகள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நன்கு காயவைத்த தரமுள்ள துவரை கிலோ ஒன்றிற்கு ரூ.58.00 வீதம் கொள்முதல் செய்யப்படும் துவ ரைக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி யாக வரவு வைக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் ஜன. 24ஆம் தேதியன்று துவரை பயிர தொடங்கி ஏப். 24ஆம் தேதி வரை அறுவடை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங் கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் தருமபுரி, அரூர் மற்றும் பென்னாக ரம் விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து தங்க ளது துவரையை விற்பனை செய்யலாம். பயறு வகை விவ சாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்க வேண் டும் என்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இத்திட் டத்தினை அனைத்து பயறு வகை விவசாயப் பெருமக்க ளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.