தருமபுரி, ஆக.12- தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் பைசுஅள்ளி ஊராட்சியிலுள்ள சின்னமுத்துகொட்டாயில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு கூட்டுறவு துணைப்பதிவாளர் இரவிச் சந்திரன் தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் எ.கோவிந்தசாமி முன்னிலை வகித் தார். மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள், துணை வேந்தர் பார்த்தசாரதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சிவபிரகாசம், வட் டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளாச்சி அலுவலர்கள் வடிவேலன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.