tamilnadu

img

உணவு பாதுகாப்பு துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி

தருமபுரி, பிப். 19- உணவு பொருள்களில் கலப்படத்தை கண்டறிவது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கிராம சுகாதார செவிலியர்க ளுக்கான பயிற்சி மொரப்பூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதனன்று நடைபெற்றது.  இப்பயிற்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கே.அரசு   தலைமை வகித்தார். மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா உத்தரவுப்படி நடைபெற்ற இப்பயிற்சியில், தருமபுரி நக ராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலரும் மொரப்பூர் ஒன்றியம் பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்  கே.நந்தகோபால்    உணவு பொருள்களில் கலப்படத்தை எளிய முறையில்  கண்டறிதல் குறித்த விழிப்புணர்வும், செயல் விளக்க மும் அளித்தார்.  மேலும் வீட்டில் உள்ள பொருள்களில் அதாவது பால், தேயிலை(டீ), தேன், பச்சை பட்டாணி, நெய், கடுகு, மிளகு, மாவு பொருட்கள், வெல்லம், மஞ்சள் மற்றும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு உள்ளிட்ட பொருள்களில் உள்ள கலப்படத்தை எளிய முறையில் கண்டறிதல் குறித்த செயல் விளக்கம்  அளித்தார். மேலும் உணவு பொருள் பாக்கெட்களில் உணவு பொருளின் பெயர், தயாரிப்பு முகவரி மற் றும் தேதி, காலாவதி தேதி, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், சைவ அசைவ குறியீடு, நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு லோகோவுடன் உரிம எண் உள்ளிட்டவை கண்டிப்பாக இருப் பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  இப்பயிற்சியில் உணவு பாதுகாப்பு அலுவ லர் நந்தகோபால் பொட்டலமிடப்பட்ட சில உணவு பொருள்களை காண்பித்தும்  நேர டியாக செயல் விளக்கம் செய்து காண்பித் தார்.  நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்க ளான மருத்துவர் வனிதா,  மணிமேகலை, கனல்வேந்தன், சத்தியமூர்த்தி மற்றும் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவ லர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வா ளர்கள், மருத்துவ பணியாளர்கள், வட்டார அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட வர்கள் பங்கேற்றனர். மருத்துவ அலுவலர் மருத்துவர் எம்.திலகர் நன்றி கூறினார்.