பென்னாகரம், அக்.7- பென்னாகரம் ஏரியூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் சலுகைகளை வழங்க மறுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத் தினர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தின் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு சங்கத்தின் ஏரியூர் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட செயலாளர் கரூரான், மாவட்ட இணைச் செயலாளர் இடும்பன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு சலு கைகளை வழங்க மறுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டிக்கும் விதமாகவும், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட அரசின் சலுகைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஒப்புக்கொள்ளும் வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டம் தொடரும் என வும் அறிவித்து, கண்டன முழக்கங் களை எழுப்பினர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமு கம், ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தனபால், ஏரியூர் கால்நடை மருத்துவர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உறு தியளித்தனர். இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.