தருமபுரி, ஜன. 20- தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி சமூக நல்லிணக்க மேடை சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் தடங் கம். பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, தலைமை வகித்தார். இதில், பென் னாகரம் சட்டப்பேரவை உறுப்பி னர் பி.என்.பி இன்பசேகரன், இந்திய தேசியக் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்ற ரசு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கா.சி.தமிழ்குமரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, மனித நேய மக்கள் கட்சியின் மாநில பிரதி நிதி சாதிக்பாஷா, மாவட்ட செய லாளர் தென்றல் யாசின், சிபிஐ எம்.எல் செயலாளர் கோவிந்த ராஜ், மதிமுக மாவட்ட பொறுப்பா ளர் தங்கராசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அன்வர் பாஷா, எஸ்டிபிஐ தலை வர் முகமது ஆசாத், அனைத்து கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகி ஜேசுதாஸ், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிவாஜி, கிறிஸ்துவ கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள் மரியம் ஜோசப், ஜேசுதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசை கண்டித்தும்,தேசிய குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. மேலும், தேசிய குடியு ரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட் டத்தை முன்னெடுப்பது, குடியு ரிமை கணக்கெடுப்பின்போது ஆவணங்கள் தருவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஜன.26ஆம் தேதியன்று அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பது, ஜன.30 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தருமபுரியில் பயங்கரவாத எதிர்ப்பு மனிதச்சங் கிலிப் போராட்டம் நடத்துவதென ஆர்பாட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. முன்னதாக, வேல் பால் டிப்போவிலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழி யாகச் சென்று தொலைபேசி நிலையம் வந்தடைந்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.