tamilnadu

img

வேப்படி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திடுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.18- வேப்படி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாப்பிரெட்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டி வட்டத்தில் வேப்படி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பிரெட்பட்டியில் அரசு மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். காவிரி தென்பெண்ணை ஆறுகளில் மழை காலங்க ளில் உபரியாக ஓடும் நீரை தருமபுரி மாவட் டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும். 100 நாள் வேலை உறுதிதிட் டத்தில் வேலை என்பதை 200 நாட்க ளாக உயர்த்தி கூலி உயர்வு ரூ.600 வழங்கிட  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாப்பிரெட்பட்டி வட்டம், மெணசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்ட செயலாளர் சி.வஞ்சி தலைமை வகித்தார். மாவட்டடக் குழு உறுப்பினர் டி.சேகர் மற்றும் மனோகரன், கிளை செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.