தருமபுரி, ஜூன் 10- பாலக்கோடு வட்டம், பட்டாபி நகர் பகுதி மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டம், பஞ்சப்பள்ளி அருகே பட்டாபிநகர் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளது. இங்கு மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர், இருளர் இனமக்கள் பல ஆண்டுகால மாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலிவேலை செய்து வரு கின்றனர். இவர்களில் பெரும் பகுதியின ருக்குச் சொந்த வீடுகள் இல்லை. ஒரே வீட் டில் இரண்டு மூன்று குடும்பங்களாக இருந்து வருகின்றனர். எனவே, பட்டாபிநகருக்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். பட் டாபிநகரில் தண்ணீருக்காக 3 போர் வெல் அமைக்கப்பட்டது. இதில் இரண்டு போர்வெல் பழுதடைந்துவிட்டது. இத னால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த போர்வெல்லை சரிசெய்து மேல் நிலைத் நீர்தேக்கதொட்டி அமைத்து தண்ணீர் விநியோகிக்க வேண்டும். மேலும், இங்க கடந்த 7 வருடங்களாக தெருவிளக்கு இல்லை. குடிசை வீட்டில் வசிக்கும், இம்மக்கள் இரவு நேரங்களில் விஷ பாம்புகள், பூச்சிகள் வீட்டிற்குள் நுழை கிறது. எனவே தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தெருவிளக்கு, குடிநீர் வழங்க வேண்டும் என வலிறுத்தி திங்க ளன்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.