தருமபுரி, செப்.3- எல்ஐசி நிறுவனத்தின் 63 ஆம் ஆண்டு தினத்தையொட்டி, தரும புரி மற்றும் சேலம் எல்ஐசி கிளை அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழா செவ்வாயன்று கொண்டாடப் பட்டது. எல்ஐசி தேசியவுடமையாக்கப் பட்ட 63 ஆம் ஆண்டையொட்டி இன்சூரன்ஸ் வாரவிழா நாடு முழு வதும் கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக தரும புரி எல்ஐசி கிளை அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழா நடை பெற்றது. இவ்விழாவை தரும புரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வாசன் கண் மருத்துவ மனையின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம் முகாமை எல்ஐசி முது நிலை கிளை மேலாளர் வெங்கட்டேசன் துவக்கி வைத்தார். மேலும், இன்சூரன்ஸ் வார விழாவையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் மற்றும் முகவர் தின, ஊழியர் தின நிகழ்ச்சிகள் கொண்டா டப்பட்டன. இந்நிகழ்ச்சியினை சந்திரமெளலி, பாரதி மோகன், மகேந்திரன், சதீஷ்பிரபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
சேலம்
இதேபோல், சேலம் கோட்டத் தில் எல்ஐசியின் 63 ஆம் ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா சேலம் ஜான்சன் பேட்டை அருகில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சிறப்பாக துவங்கியது. இவ்விழாவை எல்ஐசி சேலம் கோட்ட மேலாளர் பசுலுல் ரகுமான் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த கோட்ட மேலாளர் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சேலம் கோட்ட 34,888 பாலிசி மற்றும் ரூ.120 கோடி வரு வாயை ஈட்டியுள்ளது. மேலும் சேலம் கோட்டம் தனது சிங்கிள் பிரீமியம் இலக்கில் 50 சதவிகி தத்தை கடந்து சாதனை புரிந் துள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவில் அகில இந்திய அளவில் ராசி புரம் முதல் கிளையாக வணிக இலக்கை அடைந்து உள்ளது. மைக்ரோ இன்சூரன்ஸ் பிரிவில் 5 சதவிகித இலக்கை கடந்து சாதனை புரிந்துள்ளது என தெரிவித்தார். இதையடுத்து இன்சூரன்ஸ் வார விழாவில் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு ஓவியம், வினாடிவினா போட்டிகள் மற்றும் ஊழியர் களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் பொது மேலாளர் பாலகிருஷ்ணன், பாலிசிதாரர் கவுன்சில் உறுப் பினர் சேஷாத்திரி, வளர்ச்சி அதி காரிகள் மற்றும் அலுவலக ஊழியர் கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.