tamilnadu

img

காதிகிராப்ட் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தருமபுரி, அக்.4- தருமபுரி காதிகிராப்ட் வளாகத்தில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தொடங்கி வைத்தார். கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இவ்வாண்டும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமும் சிறப்பு  தள்ளுபடி அனுமதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கதர் விற்பனைக்கு புளுவு வரி  விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.  சென்ற ஆண்டு  தருமபுரி மாவட்டத்தில் ரூ.9.20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட் டுள்ளது.  இவ்வாண்டு தீபாவளி சிறப்பு விற்பனை குறியீடாக ரூ.15 லட்சமாக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர் பட்டு,  மற்றும் வண்ண பாலியஸ்டர் போன்ற  உற்பத்திப் பொருட்களை விற்பனை  செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.  அத்துடன் வாடிக்கையாளர்க ளின் தேவையினை முழு அளவில் பூர்த்தி செய்திடும் நோக்குடன் கதர் கிராம உற்பத்திப் பொருட்களும் தரு விக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. இவ்வாண்டும், அனைத்து ஊராட்சி ஒன்றிய  அலுவலக வளாகத் திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள் ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணி யாளர்களின் வசதிக்காக 10 சம  தவணைகளில் கதரி கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய் யப்பட்டுள்ளது. பொது மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியா ளர்கள் தீபாவளி சிறப்பு  விற்பனை காலத்தில், அரசு தள்ளுபடி மற்றும் gst வரி விலக்கினை பயன்படுத்தி அதிக அளவில் கதர்  ரகங்களை கொள்முதல் செய்து பயனடையவும்,  ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடை யாவது வாங்கி ஏழை கதர் நூற் பாளர்கள் மற்றும்  நெசவாளர்களின்  வாழ்வில் ஏற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கேட்டுக் கொண்டர். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன், காதி கிராப்ட் மேலாளர் பாலசுப்ரமணியன்,  வட்டாட்சியர் சுகுமார்,  சேலம் காதி கிராப்ட் உதவி இயக்குநர், அலுவ லகம் உதவியாளர்கள் ராமமூர்த்தி, இராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.