நாகப்பட்டினம், செப்.19- நாகப்பட்டினம் கோ-ஆப் டெக்சில் தீபாவளிச் சிறப்பு விற்பனைத் துவக்க நிகழ்வு, புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீம் அன்சாரி முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறி, துணி நூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விற்பனையைத் துவக்கி வைத்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள், தீபாவளித் திருநாளுக்குக் கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களையும் கைத்தறித் தொழிலையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.