tamilnadu

காரிமங்கலம்-பாலக்கோட்டிற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

தருமபுரி, செப்.14- காரிமங்கலத்திலிருந்து பாலக்கோட் டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டு மென அப்பகுதிமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 25க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் நாள்தோறும் பாலக்கோடு, காரி மங்கலம்,  கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பேருந்துகளில்  சென்று வருகின்றனர். ஆனால், அனுமந்தபுரம் வழியே குறைவான பேருந்துகளே  இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை நேரங்களில் போதுமான பேருந்துகள் இல்லாததால், கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பணிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடி யாமல் சிரமப்படுகின்றனர்.  எனவே, அனுமந்தபுரம் வழியாக காரி மங்கலம் மற்றும் பாலக்கோட்டுக்கு காலை  நேரத்தில் கூடுதல் பேருந்துகளை  இயக்க  அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள் ளனர்.