tamilnadu

img

3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்திடுக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

தருமபுரி, ஆக.21- 3ஆவது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் தருமபுரி மாவட்ட 9 ஆவது மாநாடு தருமபுரி ரோட்டரிஹாலில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட உதவி செயலாளர் ஏ.தங்க வேல் சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் என்.வரதராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன்வரவேற்றார். இம் மாநாட்டை சங்கத்தின் மாநில செய லாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் துவக்கிவைத்து பேசினார். சிஐடியு மாவட்டசெயலாளர் சி.நாகராசன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணை செயலாளர் ஏ.மாதேஸ்வரன், பிஎஸ்என்இயூ சேலம் மாவட்ட செயலாளர் இ.கோபால், ஏஐபிடி பிஏ மாவட்ட செயலாளர் எஸ்.அழ கிரிசாமி, பிஎஸ்என்எல் முன்னாள் மாநில உதவி செயலாளர் எம்.நாரா யணசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், எஸ்என்இஏ மாவட்டசெயலாளர் ஆர்.பாலமுரளி, ஏஐபிஎஸ்என்எல்இஏ மாவட்ட செயலாளர் எஸ்.இளந்திரையன், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.பருதி வேல், மாவட்ட செயலாளர் எம்.செளந்தரராஜன், பிஇடபள்யூஏ மாவட்ட செயலாளர் ஏ.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பிஎஸ்என்எல் அகில இந்திய உதவி செயலாளர் எஸ்.செல்லப்பா சிறப் புறையாற்றினர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கும் விற்கும் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறதும், தனி யாருக்கு விடும் முயற்ச்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4-ஜி அலைக்கற்றை வழங்க வேண் டும். 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 3 வது ஊதியக்குழு மாற்றம் செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர் களை ஓய்வுபெறும் வயது 60 லிருந்து 58ஆக குறைக்ககூடாது. ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத ஊதி யம் குறைந்தது ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவ னத்தில் கட்டாய விருப்ப ஓய்வு முடிவை கைவிடவேண்டும். தரும புரியில் சிப்காட் அமைக்கும் பணியை துவக்க வேண்டும். காவிரி ஆற்றின் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு 
இதனையடுத்து மாநாட்டில் சங்கத்தின் புதிய மாவட்ட தலை வராக டி.பாஸ்கரன், மாவட்ட செய லாளராக பி.கிருஷ்ணன், பொருளா ளராக என்.ராமேஷ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.