tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்திடுக சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.19- ஊதிய ஒப்பந்தத்தை நிறை வேற்ற வலியுறுத்தி, திங்களன்று தருமபுரி போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு சிஐடியு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழக முழுவதும் உள்ள போக்கு வரத்து ஊழியர்களுக்கு வரும் செப் டம்பர் 1ஆம் தேதி முதல் 14-வது  ஊதிய ஒப்பந்தத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேலும் போக்குவரத்து கழகங்களின் நிதி  பற்றாக்குறையை சரிசெய்ய பட் ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். 240 நாட்கள் பணியாற்றி தொழி லாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யவேண்டும். டெக் னிக்கல் இன்சென்டிவ் குறைந்த பட்சம் ரூ.100 வழங்கவேண்டும். மிகை நேரப் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு அவர்களின் விருப் பப்படி ஆர்சி அல்லது ஒப்பந்தப் படியான ஊதியத்தை வழங்க வேண்டும். ஓய்வுபெறும் தொழி லாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே அனைத்து பணப்பலன் களையும் வழங்கவேண்டும். அனைத்து பிரிவிலும் தேவையான தொழிலாளர்களை உடனே பணி நியமனம் செய்யவேண்டும் என  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. இதில் மாவட்டத்தலைவர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சி. முரளி, மாவட்ட உதவித் தலை’ வர்கள் வி.மனோன்மணி, சி. ரகுபதி, கே.தவமணி மற்றும் சிஐடியு  மாவட்டச் செயலாளர் சி.நாக ராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, பொரு ளாளர் ஜெ.முருகன் நன்றி கூறி னார்.
சேலம்
இதேபோல், சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்  சங்கம் சார்பில் சேலம் போக்கு வரத்து தலைமை அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டம் நடைபெற்றது.  இந்த தர்ணா போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. செம்பன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் எம்.சேகர், துணைப் பொதுச் செயலாளர் டி. செந்தில்குமார், துணைத் தலைவர் சி.கிருஷ்ணன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ஏ.கே.சந்திரசேகர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.