tamilnadu

img

பஞ்சப்பள்ளி அணை குடிநீர் வினியோகத்தை உடனடியாக செயல்படுத்திடுக - பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, அக். 3- கடந்த ஆறு மாதங்கலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை குடிநீர் வினியோகித்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமென தருமபுரி நகராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர். தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 70ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக ளில் ஒரு நாளைக்கு 10 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற் காக பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மூலம் நகர மக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பஞ்சப்பள்ளி அணையிலிருந்து வினியோகம் செய்யப் பட்டு வந்த குடிநீர் கடந்த 6 மாதகாலமாக முற்றிலும் நிறுத்தி, பாலக்கோடு பகுதிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தரும புரி நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு, தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழலில் உள்ளனர்.  எனவே, நகர மக்களின் நலன் கருதி, பஞ்சப்பள்ளி அணை குடிநீரைத் தொடா்ந்து தருமபுரி நகர மக்களுக்கு விநியோகிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.