tamilnadu

விடுதி சமையலர் பணி விண்ணப்பம் வரவேற்பு

தருமபுரி, செப்.12- தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ்  செயல்படும் கல்வி விடுதி களில் காலியாக உள்ள  சமையலர் பணிக்கு விண் ணப்பம் வரவேற்கப்படு கிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, தருமபுரி  மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் ஆண்  சமையலர் பணிக்கு 13  காலிப் பணியிடங் களுக்கும், பெண் சமையலர்  பணிக்கு 19 பணியிடங் களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத ஊதியம் ரூ.15,700  மற்றும் இதர படிகள்.  இந்த  காலிப் பணியிடங்கள்  இனசுழற்சி முறையில் நேர் காணல் மூலம் நிரப்பப் படும். தமிழில் எழுத, படிக்க தெரிந்த, சைவ மற்றும் அசைவ உணவுகளை தர மாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியான வர்கள்.  மேலும், 1.7.2019 அன்று, 18 முதல் 35 வயதுக் குள்பட்ட எஸ்சி, எஸ்டி  பிரிவினரும், பிசி, எம்பிசி,  பிசிஎம், டிஎன்சி பிரிவு களைச் சேர்ந்த 18 முதல் 32 வயதுக்குள்பட்டவர்களும், 18 முதல் 30 வயதுக்குள் பட்ட இதர பிரிவினர் களும் இந்த காலிப் பணியி டத்துக்கு விண்ணப்பிக் கலாம். அரசு விதிமுறை களின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுள்ள தருமபுரி மாவட்டத்தில் உள்ள விடுதி களில் முழு நேர சமையல் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்று, புகைப்படங்களுடன் தரும புரி மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவல கத்துக்கு செப்.27 ஆம்  தேதிக்குள் விண்ணப்பங் களை நிறைவு செய்து ஒப்ப டைக்க வேண்டும்.  மேலும் காலதாமதமாக பெறப்படும் விண்ணப் பங்கள், முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்பப் பெறப்படும் விண் ணப்பங்கள் மீது அரசு பரிசீ லிக்காது எனவும், மனு தாரரே முழு பொறுப்பு என  மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.