tamilnadu

குடியிருப்புகளுக்கு மனைப்பட்டா விண்ணப்பம் வரவேற்பு

தருமபுரி, அக். 26- அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் மனைப்பட்டா, இல வச மனைப்பட்டா பெற விண்ணப் பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கூறியுள் ளார்.  தருமபுரி  மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வரும் தகுதியான ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை கள் அரசு விதிகளின் படி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன் அடிப் படையில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப் பவர்களுக்கு அரசு விதிமுறைக ளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆட்சேபணையுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு விதிகளை தளர்வு செய்து வரன் முறைப்படுத்தி இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க  இயலும் இனங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஆட் சேபணையுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் நபர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.  மேலும் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் இட வசதி இல்லாமல் கூட்டு குடும்பமாக வசித்து வரும் தகுதியான குடும்ப நபர்கள் மற்றும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் சொந்த வீட்டு மனைப்பட்டா இல்லா மல் வாடகை வீடுகளில் வசித்துவரும்  தகுதியான நபர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு   இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவும் அல்லது குடியிருப்பு வீடுகள் கட்டி தரவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   தருமபுரி மாவட்டத்தில்  தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டா கோரும் மனுக் கள், வருவாய் கிராமம் வாரியாக பெறப்பட்டும், அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசித்து வரும் நபர்களின் விபரங்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அரசு நிலப்பதிவேட்டில் பதிவு செய்து தகுதியான நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் பணிகளை வட்டாட்சியர் அலுவலகம் மூலம் செய்து வருகிறது.  இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் விபரங்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ள படிவங்களில் உள்ளதா என்பதை ஏழு தினங்களுக்குள் சரிபார்த்து கொள்ள வேண்டும். இதில் தங்கள் விபரங்கள்  விடுபட்டிருப்பின் வீட்டு மனைப்பட்டா கோரும் படிவங்களை உரிய ஆவணங்களுடன்  கிராம நிர் வாக அலுவலரிடமோ அல்லது  சம் பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கத்திலோ அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப் பினை பயன்படுத்தி தருமபுரி மாவட் டத்தில் உள்ள ஏழை மக்கள் எவருக் கும் வீட்டு மனைப்பட்டா இல்லாமல் இல்லை என்ற உன்னத நிலையை அடைய அனைத்து பொது மக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கேட்டுக் கொண்டுள்ளார்.