tamilnadu

img

திட்டப்பணிகளை முடிக்கச் சொல்லி நிர்பந்திப்பதை கைவிடுக ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 23- திட்டப் பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி நிர்பந் திப்பதை கைவிடக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒருமணிநேர வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் பிஎம்ஏஒய், எஸ்பிஎம்,ஜேஜேஎம் மற்றும் நூறுநாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைகிளை வழங் கிய தீர்ப்பை நடைமுறைபடுத்த வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது சுமத்தப்பட்ட 17-ஏ குற்ற குறிப்பானையை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழி யர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் மற்றும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள ஊழியர்களுக்கு மருத்துவ வசதி ஆகிய வற்றை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட் டம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தருமபுரி மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ருத்ரையன், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் சங்கர் மற் றும் கிளை தலைவர்கள், கிளை செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.