tamilnadu

தருமபுரியில் குருப் -2 தேர்வுக்கு இலவச பயிற்சி

தருமபுரி, அக்.4- தருமபுரியில் குருப் -2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குரூப் 2, தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு  அக்.10 ஆம் தேதியன்று முற்பகல் 10.30 மணி முதல்  நடைபெற உள்ளது.  இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும், மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும். கடந்தாண்டு இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 11 தேர்வர்கள் பணிக்கு சென்றுள்ளனர், எனவே தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வினை எழுதவுள்ள  இளைஞர்கள்,  மற்றும் (தேர்வெழுதும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் உட்பட) இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.