tamilnadu

img

நூறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திடுக வி.தொ.ச மனுகொடுக்கும் போராட்டம்

தருமபுரி, அக். 13- நுாறுநாள் வேலைத்திட்டத்தை பேரூ ராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தகோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்றி தவித்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு கொரோனா நிவார ணமாக குடும்பத்திற்கு  ரூ.7,500  வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாகவும், கூலியை ரூ.600 ஆக வும் உயர்த்தி வழங்கிட வேண்டும். இத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரி வுபடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி, பாப்பிரெட்பட்டி  பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போரட் டத்திற்கு வட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், வட்ட செயலாளர் எம்.கணேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செய லாளர் எஸ்.வி.மாரிமுத்து தலைமை தாங்கி னார். இதில், மாவட்ட தலைவர் ஆர்.விஜய ராகவன், மாவட்ட செயலாளர் கே.சண்முக வள்ளி, சிபிஎம் அந்தியூர் தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன், தள்ளுவண்டி சாலை யோர சிறுவியாபாரிகள் சங்க கௌரவத் தலைவர் ஏ.கே.பழனிச்சாமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இறுதியில் பேரூராட்சி செயல் அலுவல ரிடம் மனு அளித்தனர்.  

சேலம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நடை பெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகி தங்கவேல் தலைமை வகித்தார். இதில், விதொச மாவட்ட செய லாளர் ஜி.கணபதி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் வி.கே.வெங்க டாச்சலம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இதேபோல், தம்மம்பட்டி பகுதியில் நடைபெற்ற போரட்டத்தில் வெங்கடாச லம் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் தாலுகா செயலாளர் ஜோதிகுமார் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.