tamilnadu

img

பட்டியலின கிறிஸ்துவர்கள் எஸ்சி,பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.10- பட்டியலின கிறிஸ்துவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி எஸ்சி/எஸ்டி பணிக்குழு தருமபுரி மறை மாவட்டத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பட்டியலின கிறிஸ்துவர்களை எஸ்சி பட்டியலில்  சேர்க்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா கமிசன் பரிந்துரை களை அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி செந்தில்நகரில் துவங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், சென்னை சேசுசபை பணித் தளத் தலைவர் ஜெபமாலைராஜா, எஸ்சி/எஸ்டி செயலர் ஆர்.ஜேசுதாஸ், சமூக நல்லிணக்க மேடை பொறுப்பாளர் ஆர்.சிசுபாலன், மக்கள் கண்காணிப்பகம் தருமபுரி மாவட்டத்தலைவர் செந்தில்ராஜா, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரி,மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, நிர்வாகிகள் நிர்மலா ராணி உள்ளிட்டோர்  கலந்து கொண்டு பேசினர்.