தருமபுரி, பிப். 2- அரூரை அடுத்த பாரிவனம் கிரா மத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு கிராம ஊராட்சிக்குட்பட்டது பாரிவனம் கிராமம். இக்கிராமத்தில், 75-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருளா் சமூக மக்கள் வசித்து வருகின்றனா். ஆனால், இந்த கிராமத்தில் தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வில்லை. மின் கம்பங்கள் இல்லாத தால் குடியிருப்புகளுக்கு மின் இணைப் புகளை பெற முடியவில்லை. இதனால், போதிய வெளிச்சம் இல்லாததால் குடி யிருப்புப் பகுதிகளில் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் தாக்குலுக்கு அப்பகுதி மக்கள் உள்ளாகி வருகின்றனர். இதனால் கிராம மக்கள், குழந்தை களுடன் அச்சத்தில் வாழ்ந்து வரும் நிலை உள்ளது. எனவே, பாரிவானம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு தேவை யான மின் கம்பங்கள், தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின் றனர்.