tamilnadu

img

சமுதாயகூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தல்

தருமபுரி,டிச.11- அண்ணாமலைப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட  சமுதாய கூடத்தை பயன் பாட்டுக்குக் கொண்டுவர அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், நவலை கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அண்ணாமலைப் பட்டி கிராமம். இந்த ஊரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 2016-17-ஆம் நிதியாண்டில், ரூ.30 லட்சம் செலவில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது.இந்த சமுதாய கூடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும், சுமார் இரண்டு வரு டங்களாக பயன்படுத்தப்படாமல் பூட் டியே உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாத தால், சமுதாய கூடம் அமைந்துள்ள பகுதி யில் முள்புதா்கள் அடைந்து காணப்படு கிறது.  இந்த சமுதாய கூடத்தில் உணவு சாப்பி டுவதற்கான அறைகள், மின் விளக்குகள், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், சமுதாய கூடம் பயனற்று பூட்டியே உள்ளது. எனவே, பயனற்று பூட்டிக் கிடக்கும் சமுதாய கூடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;