தருமபுரி, டிச.7- அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டுமென மாணவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் விளையாட்டு மைதா னத்தில் சுற்று வட்டா ரத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி மேற் கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் விளை யாட்டு பயிற்சி மேற் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அரூர் பகுதியில் பெய்த மழையால், விளை யாட்டு மைதானம் முழு வதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. இதனால் நடைப் பயிற்சி மேற்கொள்வோர் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். எனவே விளை யாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மைதானத்தை சீர மைக்க வேண்டுமென மாண வர்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ள னர்.