tamilnadu

img

மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

தருமபுரி, மே 25-அரூர் அருகே மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டன.தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கொளகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயம் (50), இவரது மனைவி மாரி, கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனியாக குடிசை வீட்டில் குடியிருந்து வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால் குடிசையில் தீப்பற்றி சிறிது நேரத்திலேயே குடிசை முழுவதும் எரிந்தது.இதுகுறித்து அரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இருப்பினும் தீ குடிசை முழுவதும் பரவி குடிசை சாம்பலானது. இதில், மாரி சேமித்து வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம் எரிந்து நாசமானது. மேலும் ரேசன்கார்டு, துணி மற்றும் வீட்டுஉபயோக பொருட்கள் எரிந்து நாசமானது.