tamilnadu

img

தருமபுரி அரசு பள்ளியில் உலக உணவுபாதுகாப்பு தினவிழா

 தருமபுரி, ஜூன் 10- தருமபுரி அரசு அவ்வையார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு துறை சார் பில் உலக உணவுபாதுகாப்பு தினவிழா கொண்டாடப் பட்டது. ஜூன் 7 ஆம் தேதியன்று உலக உணவு பாது காப்புதினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங் களில் உணவுபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடை பெற்றது. இதன்ஒருபகுதியாக தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் உணவுபாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு முகாமும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யும் நடைபெற்றது. நாட்டில் பாதுகாப்பான உணவு ஒவ்வொருவருக்கும் கிடைக்கவும்,ஏழை  மக்களுக்கு சத்தான உணவு கிடைக்கவும், தன் சுத்தம் மற்றும் தன்னைச்சுற்றி உள்ளவர்கள் சுகா தாரமாக இருக்கவும் உணவு கலப்படத்திற்கு எதிராக வும், ஒவ்வொருகுடிமகனும் ஆரோக்கியமாக  இருக்கவும், பாதுகாப்பான உணவு கிடைக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உணவுபாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெ.வெங்கடேசன், உணவுபாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், தலைமை ஆசிரியர் தெரஸா, உதவி தலைமை ஆசிரியர் வள்ளியம்மாள் உள்ளிட்ட மாணவிகள் பங்கேற்றனர்.