tamilnadu

img

தருமபுரி: எம்.பி., அலுவலகம் திறப்பு

தருமபுரி, பிப்.16- தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருக்கான புதிய அலுவலகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஞாயி றன்று திறந்து வைத்தார். 17 ஆவது நாடாளு மன்றப் பொதுத் தேர்தலில்  தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில்  போட்டியிட்ட மருத்துவர். டிஎன்வி.எஸ். செந்தில்குமார் வெற்றிபெற்றார்.தொகுதியில் பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு அப்பாவு நகரில் புதிய  அலுவலகம் கட்டப்பட்டது.  இந்த அலுவலகத்தை திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அலுவலகத்தில் உள்ள மறைந்த  திமுக தலைவர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு, உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, திருச்சி மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம்,  பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.