மின் வாரியத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் தருமபுரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி மின்சார தொழிலாளர் சம்மேளனம், ஏஇஎஸ்யூ, ஏஐசிசிடியு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.