தருமபுரி, நவ.3- நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று தரும புரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார். நடப்பாண்டில், தருமபுரி மாவட்டத்தில், நெல் பயிருக்கு 458 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கி களில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், மாவட்டத்தில் இந்த திட்டத்தை பொது சேவை மையங்கள் மூல மாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூல மாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் நெல் பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் 30 ஆம் தேதியாகும். எனவே, விவசாயிகள் இறுதி நேர சிரமத்தை தவிர்க்க காப்பீட்டுத் பிரிமியம் தொகையை செலுத்தி தங்களது பயிரினை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 1.5 சதவிகிதம் மட்டும் பிரிமியம் செலுத்தினால் போதுமானது. அதாவது, நெல் பயிருக்கு ரூ.472.50 காப்பீட்டு பிரிமியமாக செலுத் தினால் போதுமானது. மீதி பிரிமியம் தொகையான ரூ. 6437.50-யை அரசே விவசாயிகளுக்காக செலுத்துகிறது. மேலும் விவசாயிகள் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள லாம். கடந்த 2018-19ம் ஆண்டு நெல் சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்த 4,081 விவசாயிகளுக்கு ரூ.3.61 கோடி இழப் பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அறிவிக்கை செய்யப்பட்ட வரு வாய் கிராமங்களில் நெல் சாகுபடி செய் துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.