தருமபுரி, மே 26-தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிட்டுதன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அன்புமணி ராமதாசை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சென்னை சென்ற எஸ்.செந்தில்குமார் அங்கிருந்து ஞாயிறன்று வெற்றி பெற்ற தொகுதிக்கு திரும்பி வந்தார். அப்போது, தருமபுரிமாவட்ட எல்லையான காரியமங்கலத்தில் திமுக மற்றும் கூட்டணிகட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு உற்சாகவரவேற்பு அளித்தனர். பின்னர் தருமபுரி நான்கு வழிச்சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராசர் ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டசெயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, பாலக்கோடு ஒன்றிய செயலாளர் பி.கே.முருகன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சி.செல்வராஜ், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.சண்முகம், தருமபுரி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சேட்டு, மாவட்டஇளைஞர் அணி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோ.வி.சிற்றரசு, எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, டி.எஸ்.ராமச்சந்திரன், சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, ஆர்.எஸ்.பி மாவட்ட பொறுப்பாளர் பி.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.