tamilnadu

அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் மனு

தருமபுரி, ஜன. 28- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதி கள் செய்து தரக் கோரி மாணவர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கழிவறை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்யப்பட வில்லை. வகுப்பறைகள் தினமும் சுத்தம் செய்யப்படு வதில்லை. காலிப்பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க  வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடந்த மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

;