tamilnadu

img

பழங்குடி மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

தருமபுரி, மே 30-பழங்குடி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  மருத்துவர் எஸ்.செந்தில்குமார் உறுதியளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற  மருத்துவர் எஸ்.செந்தில்குமார், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில், சித்தேரி ஊராட்சியில் உள்ளபழங்குடி மலைக்கிராமங்களான  சித்தேரி, பேரேரிபுதூர், தோல்தூக்கி, அரசநத்தம், சூரியக்கடை, தேக்கல்பட்டி, விளாம்பள்ளி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பழங்குடிமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.அப்போது அவர் பேசுகையில், மலைக்கிராமங்களுக்கு தார்ச் சாலை வசதி மேம்படுத்தவும், குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவும் முன்னுரிமை அளித்து செயல்படுவேன். அதேபோல, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என  எஸ்.செந்தில்குமார் உறுதியளித்தார்.இதில், திமுக நிர்வாகிகள் சித்தார்த்தன், வேடன், குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;