தருமபுரி, செப்.14- ஆரம்பப் பள்ளிகள் இணைப்பு மற்றும் சத்துணவு மையங்களை மூடுவதை கைவிடக்கோரி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க தருமபுரி மாவட்ட 12ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு தருமபுரி பெரியார் மன்றத்தில் சனி யன்று தோழர் எம்.வெற்றிவேல் நினைவரங்கம், தோழர் கே.சுவாமி நாதன் நினைவு மேடையில் நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் எம்.யோகராசு வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர்,பொருளாளர் கே. புகழேந்தி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்து பேசினர். ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச் செய லாளர் ஏ.மாதேஸ்வரன், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பி.எம்.கெளரன், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் எஸ்.கவிதா உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தீர்மானங்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், ஊராட்சி செயலா ளர்கள், கணினி இயக்குபவர்கள், சுகாதார திட்ட மேற்பார்வை யாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்.தமிழக அரசுத் துறையில் உள்ள 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கைவிடவேண்டும். ஆரம்பப்பள்ளிகள் இணைப்பு மற்றும் சத்துணவு மையங்கள் மூடுவதை கைவிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களை பொதுப்பணித் துறை, மாவட்ட நிர்வாகமும் பரா மரிக்க வேண்டும். தொப்பூர், ஓமலூர் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். அரூர்-சேலம் சாலையை செப்பனிட வேண்டும். ஒகேனக்கல் குடிநீரை தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநில துணைத்தலைவர் எஸ்.பார்த்திபன் நிறைவுரையாற்றி னார். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் சி.காவேரி நன்றி கூறி னார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக எம்.சுருளி நாதன், மாவட்டச் செயலாளராக ஏ.சேகர், பொருளாளராக கே.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர்களாக எம்.சிவப்பிர காசம், பி.எஸ்.இளவேனில், எஸ்.சரவணன், அண்ணாகுபேரன், மாவட்ட இணைச் செயலாளர் களாக சி.காவேரி, ஜி.பழனியம் மாள், எஸ்.குணசேகரன், ஜெயந்தி, தணிக்கையாளர்களாக எம்.முருகன், எம்.முனிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, மகளிர் துணைக் குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ். இளவேனில் தலைமையில் மகளிர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநில அமைப்பாளரும், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவருமான எஸ்.தமிழ்செல்வி, மகளிர் துணைக்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனியம்மாள், பி. மகேஸ்வரி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதேபோல் பணி நிறைவு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.யோக ராவிற்கு நினைவு பரிசு வழங்கி கெரளவிக்கப்பட்டார்.