tamilnadu

img

தருமபுரில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிப்பு கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தல்

தருமபுரி, அக்.4- தருமபுரியில் டெங்கு காய்ச் சலால் 11 பேர் பாதிப்பு, பாதிக்கப் பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதகாலமாக பருவ நிலை மாற்றத்தால் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  மழைநீர் தொடந்து தேங்குவதா லும், கழிவுநீர் கால்வாய் சுத்தம்  செய்யதாதாலும் கொசு உற்பத்தி யாகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைக ளிலும், தனியார் மருத்துவமனை களிலிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக குவிந்த வண்ணம் உள்ளனர். எனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவ தும் கிராமங்களில் சிறப்பு மருத் துவ சிகிச்சை முகாம் அமைக்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள கிரமாங்களில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் குப்பைகளை சுத் தம் செய்தல், குடிநீர் தொட்டியை  கழுவுதல் போன்ற நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க கொசுமருந்து அடிக்க வேண்டும் என மாவட்ட நிர் வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சீனிவாசராஜூ செய் தியாளர்களிடம் பேசுகையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 230 நோயா ளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 200 பேர் புறநோயளியாக தினமும் வந்து செல்கின்றனர். இதில் 7 பெரியவர்கள், 4 குழந்தை கள் உட்பட 11 பேர் டெங்குகாய்ச்ச லால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு  காய்ச்சலுக்கு என்று சிறப்பு சிகிச்சை பிரிவு வார்டு துவக்கப் பட்டு செய்பட்டு வருவதாக தெரி வித்தார்.