தருமபுரி, செப். 12- தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி ரூ.1 கோடி முறைகேடு செய்துள்ளதாக தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.செந்தில் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் தருமபுரி மக்களவை உறுப்பினர் எஸ்.செந் தில்குமார் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிக ரித்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே தொற்றுப் பரவல் குறைவான மாவட்டமாகவும், இறப்பு விகிதம் குறைந்த மாவட்டமாகவும் இருந்த தருமபுரியில் ஊரடங்கு தளர்வு கார ணமாக தொற்று அதிகரித்துள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் இன்னும் ஒரு வாரத்தில் தருமபுரி மாவட்டத்தில் சிகிச்சையளிக்க முடி யாத சூழல் உருவாகும்.
மேலும், மக்களவை உறுப்பின ரின் தொகுதி மேம்பாட்டு நிதி 2020-21இன் கீழ் ஒரு கோடி ரூபாய் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வாங்க வேண்டிய பட்டியலுடன் கடி தம் அனுப்பப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக நிறுத்தப் பட்டது. இதற்கிடையே, 2019-20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம் பாட்டு நிதியில் என்னுடைய கையொப்பம் இல்லாமல் ரூ.1கோடி நிதி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் எதற்காக எடுக்கப்பட்டது என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட தற்கு மருத்துவமனை உபகர ணங்கள் வாங்க எடுக்கப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது. ஆனால், என்ன உபகரணங்கள் வாங்கப்பட் டது என்பதற்கான முறையான பதில் இதுவரை கிடைக்கவில்லை.
மக்களவை உறுப்பினரின் கையொப்பம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் நிதி எடுக்கப்பட்டுள்ளது குறித்து புள்ளியல் துறை அமைச் சகத்தில் புகாரளிக்கவுள்ளேன். இது குறித்து, கண்காணிப்புக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண் டும். நிதி கையெழுத்திடும் அதி காரம் மாவட்ட ஆட்சியரிடம் மட் டுமே உள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர் மீது புகார் அளிக்கப்படும். மேலும், தொகுதியில் நடைபெ றும் நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப் பினரை அழைக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை உள்ளது. இதை பின்பற்றாத தருமபுரி ஆட்சி யர் மலர்விழி மீது உரிமை மீறல் பிரச் சனையை மக்களவையில் எழுப்பு வேன். இவ்வாறு எஸ்.செந்தில் குமார் எம்.பி., தெரிவித்தார்.