tamilnadu

விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது... சூரப்பாவுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தருமபுரி:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகன், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் என்பவர் 3 ஆண்டுகால பணிக் காலத்தில் சுதந்திரமாக செயல்படலாம். அதற்கு தடையில்லை” என்றார்.துணை வேந்தர் என்பவர் விதிகளுக்குட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் மாநில அரசு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்றும் அமைச்சர் எச்சரித்தார்.