tamilnadu

img

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கிடுக!

தருமபுரி, செப்.26- தொழிலாளர்கள் நலனை கவனத்தில் கொண்டு, தீபாவளிக்கு 15 தினங்களுக்கு முன்பு போனஸ் வழங்க வேண்டும் என்று பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் கூட்டம் தருமபுரியில்  வியாழனன்று மாநில தலைவர் எம்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இதில், 2023-24 ஆண்டுக்குரிய போனஸ் குறைந்தபட்சம் 12 சதவீதம் கூடுதலாக ஊக்கத் தொகை எட்டு சதவீதம் ஆக 20 சதவீதம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளி களுக்கு குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும். கூட்டுறவு பஞ்சாலைகளில் மூன்றில் இரு பங்குக்கும் மேல் 1400 பெண்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு ஊதி யம் சட்டப்படியான பயிற்சியாளர்கள் தினக்கூலி ரூபாய் 544 - க்கும் குறைவாக வழங்கப்படுகிறது. அந்த ஊதியத்திற்கும் போனஸ் வழங்காமல் வஞ்சிப்பது சரியல்ல.  ஆலை நிர்வாகங்கள் தினக்கூலி தொழிலாளி களுக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும்.

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக...

சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து, அக்டோபர் 1 ஆம் தேதி மறியல் போராட்டத் தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்பது. 

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  என்டிசி பஞ்சாலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. அதை நம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளனர். ஒன்றிய அரசு உடனடியாக ஆலைகளை இயக்க வேண்டும்.

கூட்டுறவு பஞ்சாலைகளில், இரண்டு ஆண்டுகளில் 480 நாள் பணிபுரிந்து இருந்தால் சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நிர்வாக மேல்முறையீடு உயர்நீதிமன்றத் தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 208 பேர் பணி நிரந்தரம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும். 

பஞ்சாலைகளில் தொழில்வாரியான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த காலங் களில் போடப்பட்டு வந்தது. கடந்த 23 ஆண்டு களாக ஊதிய உயர்வு இல்லை. குறைந்த பட்ச கூலியை நிர்ணயம் செய்ய கோய முத்தூர் தொழிலாளர் கூடுதல் ஆணையர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி தன்னுடைய பணியை துவங்கி 90 சதமான பணிகள் முடித்துள்ளது. இந்நிலையில், கமிட்டியின் தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு குறைந்தபட்ச கூலி நிர்ணயக் குழுவை செயல்படுத்த வேண்டும். 

தருமபுரி, பி.எம்.பி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கத வடைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரண மாக மூன்று மாதங்களாக 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர் களுக்கு தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், சங்கத்தின் பொதுச் செய லாளர் எம்.அசோகன், பொருளாளர் எஸ்.சக்திவேல், தருமபுரி மாவட்ட செயலாளர் எம். கண்ணதாசன், செயலாளர் பி.ஜீவா உள்ளிட்ட சம்மேளன குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.