tamilnadu

img

பீரோவில் மின்சாரம் தாக்கியத்தில் 3 பேர் பலி

தருமபுரி அருகே பீரோவில் மின்சாரம் தாக்கிய விபத்தில் 3 பேர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தருமபுரியில் சந்தபேட்டை பகுதியில் ஒரு குடும்பத்தினர் இன்று வீடு காலி செய்துள்ளனர். அப்போது மாடியில் இருந்து பீரோவை கீழே இறக்கும் போது அதில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பீரோவை தூக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;